இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், இத்திட்டத்திற்கு விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் 2020-21-ஆம் ஆண்டு நிதியளிக்கப்பட்டது. கன்டெய்னர் லாரிகள், லாரிகள் மற்றும் பஸ்கள் இந்த சாலையை பயன்படுத்தும் வகையில் 7 மீ அகலமுள்ள சாலை தற்போது 10 மீட்டராக விரிவுபடுத்தப்படுகிறது. மொத்தமுள்ள 36 கி.மீ தொலைவில், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி நகரங்களுக்கு இடையேயான 25 கி.மீ.தொலைவு அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது.வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வரை 5 கி.மீ தொலைவிற்க்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜவ்வாது மலையில் உள்ள காப்புக் காடு பகுதியில் 6 கி.மீ தொலைவிற்கு மத்திய சுற்றுச்சூழல்,வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டி உள்ளது.அதற்கு ஆன்லைனில் அனுமதி பெறுவதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பல ஆண்டுகள் பழமையான மரங்கள் அகலப்படுத்தும் பணிக்காக வெட்டப்பட்டுள்ளன.வெட்டப்பட்ட ஒவ்வொரு மரத்திற்கும்பதிலாக புளி, ஜாமுன், வேம்பு என 10 மரக்கன்றுகள் நடப்படுகிறது. இது கிராம மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயனுள்ளதாக இருக்கும். மேலும் அதிகப்படியான மழைநீரை அருகிலுள்ள நீர்நிலைகளில் வெளியேற்ற 1.5 மீ ஆழத்தில் புயல் நீர் வடிகால்களும் கட்டப்படுகின்றன வருகிற ஆகஸ்டு மாதத்திற்குள் சாலை விரிவாக்க பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினார்.